விடுதலையின் சத்தியங்கள்
விடுதலை என்றால்?
- கட்டப்பட்டிருப்பவர்கள் கட்டவிழ்க்கப்படும் செயல் (லூக்-13: 16)
- சிறையிலிருப்பவர்கள் சிறையைவிட்டு வெளியே வரும் செயல்
- அடிமையாக இருப்பவர்கள் சுதந்திரமாக வாழ்ந்திட உரிமை பெரும்செயல்
- சாத்தானும், அசுத்த ஆவிளும்;, மாந்த்ரீகங்களும் கட்டுகின்றன (லுக்கா-13: 16, 11-12)
- பாவங்கள், சபாங்கள் சிறைப்படுத்துகின்றன (சிம்ஸோனின் வாழ்வு சிறையாக்கப்பட்டது)
- பயங்கள், கவலைகள், தீயபழக்கங்கள் அடிமைப்படுத்துகின்றன (எபி-2: 15)
விடுதலையைக் குறித்த கேள்விகள்:
- யாரிடமிருந்து விடுதலை?
- யாரால் விடுதலை?
- யாருக்கு விடுதலை?
- யாருடைய நாமத்தில் விடுதலை?
- எப்பொழுது விடுதலை?
- எவைகளிலிருந்து விடுதலை?
- எப்படிப்பட்ட விடுதலை?
- எதற்கு விடுதலை?
விடுதலையின் விளைவுகள்:
1. சரீரத்தில் விடுதலையின் விளைவு:
சுகம், பெலன், ஆரோக்கியம். சரீரத்தின் சகல உறுப்புகளும் சரியாக இயங்குதல்
2. சுபாவத்தில் விடுதலையின் விளைவு:
தாழ்மை, நற்குணம், நன்னடத்தை, கீழ்படிதல், மன்னித்தல், விட்டுக்கொடுத்தல், புரிந்துகொள்ளுதல், உதவிசெய்தல்
3. உணர்ச்சியில் விடுதலையின் விளைவு:
சாந்தம், சந்தோஷம், இரக்கம், மனதுருக்கம், கரிசனை, பொறுமை, நிதானம்
4. சிந்தையில் விடுதலையின் விளைவு:
தேவையற்ற, வீணான, தவறான, அசிங்கமான, அழிவுக்கேதுவான எண்ணங்களுக்கு உள்ளாகாமலிருத்தல்.
நலமானவைகள், நன்மையானவைகள், பக்திவிருத்திக்கு ஏதுவானவைகள், பரிசுத்தமானவைகள், அன்பானவைகள், தேவனுடைய வசனத்தில் உள்ளவைகள் போன்றவற்றை அதிகமாக சிந்தித்தல்
5. நினைவு மண்டலத்தில் விடுதலையின் விளைவு:
மறக்க முடியாத தீமைகள், துக்கங்கள், அதிர்ச்சி மற்றும் திகிலுக்குரிய சம்பவங்கள், குற்றஉணர்வுகள் நம்மைவிட்டு விலகும்.
நினைவில் இருக்க வேண்டிய நற்காரிங்கள் நமக்குள் பெருகும்.
Comments
Post a Comment