Posts

பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமம் (Holy Bible) "சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" 66 மணிநேரத்தில் வேதாகமத்தின் 66 புத்தகங்கள் நீங்கள் உங்கள் மொபைல் போனில் படிக்க வேண்டுமா? பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்(.apk file) Download (பதிவிறக்கம்)                   66 மணிநேரத்தில் வேதாகமத்தின் 66 புத்தகங்கள் இணையத்தில் படிக்க வேண்டுமா? கீழே கிளிக் செய்யவும் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு

ஆவிக்குரிய போராட்டம் (யுத்தம்)

எபேசியர்-6: 12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப் பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 2தீமோத்தேயு-2: 5 மேலும் ஒருவன் மல்யுத்தம் பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான். கிறிஸ்தவ வாழ்க்கை வெல்லுகிற வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஜெயம்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு நான் கொண்டுவருகிற பலன் கொடுக்கப்படும் என்பதை இயேசுவே வாக்குப்பண்ணுவதை நாம் அறிந்திருக்கிறோம். நாம் வெல்ல வேண்டிய அல்லது ஜெயிக்க வேண்டிய காரியமானது இரண்டு விதமான கோணங்களில் உள்ளது என்று பார்க்கிறோம். ஒன்று போராட்டம், மற்றொன்று போட்டி. இந்த நாளிலே போராட்டத்தில் ஜெயிக்க வேண்டிய பகுதியைக் குறித்து அறிந்துகொள்ளக் கர்த்தருடைய ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக! நம்முடைய யுத்தம் அல்லது போராட்டமானது மாம்சத்திற்குரியது அல்ல, மனிதர்களோடும் அல்ல. நாம் ஆவிக்குரியவர்களாக இருக்கிறபடியால், நம்முடைய யுத்தம் ஆவிக்குரியதாக இருக்கிறதுது. அதாவது, மாம்ச பெலத்தை வைத்தோ...

தேவனைத் தேடுவது ஆசீர்வாதத்திற்காகவா அன்பிற்காகாவா?

எபே-1: 3 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தேவன் ஆசீர்வதிப்பவர், ஆசீர்வதிக்க விரும்புகிறவர், ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறவர், அவரே மெய்யான ஆசீர்வாதங்களின் பிறப்பிடமாக இருக்கிறார். இந்த உலக வாழ்வில் நமக்கும் ஆசீர்வாதம் தேவையானதாக இருக்கிறது, ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன. சொந்த உழைப்பால், முன்னோர்கள் சேர்த்து வைத்ததால், பிறருடைய உதவியால், சாத்தானால், தேவனால் என்று பலவிதங்களில் நாம் ஆசீர்வாதங்களைப் பெற்றிட முடியும். தேவனை அறிந்த மக்களிடம் தேவன் எதிர்பார்ப்பது என்ன? ஏசா-55: 6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். நாம் எதற்காக சபைக்கு வருகிறோம், ஜெபிக்கிறோம், ஆராதிக்கிறோம், வேதம் வாசிக்கிறோம், உபவாசிக்கிறோம், ஊழியம்செய்கிறோம்? பிரச்சினைகள் தீர்ந்திட, வியாதி சுகமாகிட, தேவைகள் சந்திக்கப்பட போன்ற ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக நாம் இவைகளைச் செய்வோமானால், ...

அன்பின் வட்டம்

Image
1யோவான்-4: 8 தேவன் அன்பாகவே இருக்கிறார் கிறிஸ்தவமானது முழுமுழுக்க அன்பை மையமாகக் கொண்டாதாக இருக்கிறது. தேவனிடத்தில் அன்பு இருக்கிறது என்பதைவிட தேவனே அன்பாக இருக்கிறார் என்பதுதூன் உண்மை. அல்லது அன்பு என்றாலே அது தேவனை வெளிப்படுத்துகிற அடையாளமாக இருக்கிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் இணைப்பு என்பது அன்பால் நடைபெற்றிருக்கிறது. தேவனால் படைக்கப்பட்டு தேவனோடு அன்பிலே இணைக்கப்பட்டவனாக இருந்த முதல் மனிதனை சாத்தான் பிரித்தான். ஆதி-3: 8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். கர்த்தருடைய சந்நிதிக்கு விலகுதல் என்பது தேவன் விரும்பாத ஒன்றாகும்;. தம்மோடு இருப்பதற்காகத் தான் மனிதனைத் தேவன் படைத்தார். ஆனால் பாவத்தின் மூலம் தேவனைவிட்டு அல்லது அன்பைவிட்டு விலகிச்சென்றான். ஆனாலும் தேவன் மனிதனை அப்படியே விட்டுவிடவில்லை. மீண்டும் தம்மோடு இணைப்பதற்காக தாமே மனிதனாக பூமிக்குவந்து பாவத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான முழ...

அடையாளங்கள் அற்புதங்கள்

சங்-78: 43 அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். 'எகிப்து' என்பது இஸ்ரவேலர் அடிமைகளாக இருந்ததையும், 'சோவான் வெளி' என்பது அவர்கள் எகிப்தைவிட்டு வெளியேவந்து, கானானுக்குள் போவதற்குமுன் 40 வருடங்கள் வனாந்திரத்திலே சுற்றிநடந்ததையும் குறிப்பிடுகிறது. எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களை ஒடுக்கினார்கள் , எதிரிகள் வனாந்தரத்திலே அவர்களை எதிர்த்தார்கள் , இப்படிப்பட்டவர்கள் மத்தியிலே தேவன் செய்தவைகள் 2 வகைகளாகப் பிரித்துக்காட்டப்பட்டுள்ளன. ஒன்று அடையாளங்கள், மற்றொன்று அற்புதங்கள். அன்றைய இஸ்ரவேலர்கள் இன்றைய இரட்சிக்கப்பட்ட மக்களுக்கு நிழலாட்டமாகவும், அவர்களுடைய வாழ்வு இன்றைய விசுவாசிகளுக்கு திருஷ்டாந்தமாகவும் (முன்அடையாளம்) இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. யாத்-7: 3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன். எகிப்தியருக்கும் எதிகரிகளுக்கும் செய்யப்பட்டது அடையாளங்களாகும்.           தண்ணீர் முதல் தலைச்சன் பிள்ளைவரை தேவன் எகிப்தியரு...

கடவுளுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது

மத்-22: 14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். விருந்துக்கு அழைக்கப்படுதல் (சுவிசேஷத்தின் மூலமாக) வேலைக்கு அழைக்கப்படுதல் (திராட்சைத் தோட்டத்தில்) உறவுக்கு அழைக்கப்படுதல் (ஜெபம், தனித்து உறவாடுதல், பரிசுத்தமாக வாழுதல், பணிவிடை செய்தல்) ஊழியத்திற்கு அழைக்கப்படுதல் (பகுதிநேரமாகவோ, முழுநேரமாகவோ) அழைப்பதும், தெரிந்தெடுப்பதும் யாருடைய வேலை? தேவனுடைய வேலை! எபி-5: 4 ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை. 1தீமோ-1: 12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். அழைப்பை எப்படி அறிவது? தேவனின் வேலையைக் குறித்து: இருதயத்தில் எண்ணம் உண்டாகுதல், மனதில் பாரம் அழுத்துதல், ஆசை அதிகரித்தல், அதைக்குறித்த வேதப்பகுதிகள் அடிக்கடி கவனத்தில் வருதல். 1. அழைப்ழை ஏற்க மறுத்தவர்கள்  மோசே said send someone else (யாத்-3: 4-11, 4: 12-13) கர்த்தர் மோசேயின்மே...

ஆவியானவரின் அடையாளம்:

சபையைப் பெலப்படுத்தி நடத்திச் செல்வதற்காக தேவனால் கொடுக்கப்பட்டவராக பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். திரித்துவத்தில் மூன்றாவது நபராக இருக்கும் ஆவியானவர் இப்பொழுது சபையோடு இருந்து எங்கும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆவியானவரைக் குறித்து யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட முக்கிய குறிப்புக்களை நாம் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம். வெளி-1: 4 '  அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,' ஆவியானவரோடு ஏழு என்ற எண் எல்லா இடங்களிலும் இணைக்கப்பட்டு வருவதை நாம் கவனிக்க முடிகிறது. ஏழு என்ற எண் வேதாகமத்தின்படி பூரணத்தை அல்லது முழுமையைக் குறிப்பதாக உள்ளது (Perfection or Completion). பரிசுத்த ஆவியானவர் குறைவற்றவராக, பழுதற்றவராக, முழுமையானவராக இருக்கிறார். 1. சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கும் ஆவி: இயேசு பூமியை விட்டுப் பரலோகத்திற்குச் சென்றதும் தாம் வாக்குப்பண்ணியபடி பரிசுத்த ஆவியானவரைப் பூமிக்கு அனுப்பி வைத்தார். தமது சீடர்களையும் அப்போஸ்தலர்களையும் அதாவது சபையைத் தேற்றும்படி, கற்றுக்கொடுத்து நடத்திச் செல்லும்படி, பாவங்களைக் குறித்து உணர்த்த...